மாவ்லின்னாங் கிராமத்தை ஆசியாவிலேயே வெகு சுத்தமான கிராமமாக ‘டிஸ்கவர் இந்தியா’ பத்திரிகை சான்றளித்திருக்கிறது. இது ஷில்லாங் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த அழகிய சிறு கிராமம் இந்தோ-பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த கிராமவாசிகளின் முக்கியத்தொழில் விவசாயமே ஆகும். பலகாலமாகவே இப்பகுதியின் பூர்வகுடி மக்கள் இந்த கிராமப்பகுதியின் இயற்கைத்தூய்மையை பேணிக்காத்து வருகின்றனர்.
மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைக்கூடைகள் இந்த கிராமம் முழுக்க வைக்கப்பட்டிருப்பதோடு எந்த ஒரு குப்பை மற்றும் வேண்டாத பொருளும் வெளியிடங்களில் சிதறிக்கிடப்பதை இவர்கள் விரும்புவதில்லை.
குப்பைக்கூடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் பின்னர் உரமாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். அது மட்டுமல்லாமல் காட்டு வளத்தை காப்பதிலும் இந்த கிராம மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். புதிய மரங்கள் நடுவதிலும் முனைப்பாக ஈடுபடுகின்றனர்.
ரம்மியமான இயற்கை காட்சிகள் மற்றும் வேர்ப்பாலம், சாய்வுப்பாறை போன்றவை இந்த கிராமத்தில் பயணிகளுக்காக காத்திருக்கும் சுவாரசிய அமங்களாகும். நகரச்சந்தடிகளிலிருந்து விலகி ஒரு உண்மையான, அமைதியான, தூய்மையான கிராமத்து அழகை அள்ளிப்பருக விரும்பும் ரசிகர்களுக்கு இந்த மாவ்லின்னாங் கிராமம் மிகவும் ஏற்றது.



Click it and Unblock the Notifications