பனாவாலி என்றும் வனாவாலி என்றும் அழைக்கப்படும் தொல்பொருள் மணல் மேடு ஃபதேஹாபாதில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ளது.
10மீட்டர் உயரமுள்ள இம்மணல் மேடு ஏறத்தாழ ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மணல் மேட்டிற்கு அருகில் மனிதர்கள் யாரும் வாழவில்லையென்றாலும் முக்கியமான தளமாக கருதப்படுகிறது.
இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் கிமு 2500-2300 மற்றும் கிமு 2300-1700 வரையிலான ஏராளமான அரிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது ஹரப்பா நாகரீகத்தைப்பற்றிய ஏராளமான தகவல்களும் இதன் மூலம் கிடைத்துள்ளன.
முழுதாக வளர்ச்சியடைந்த நகரம் இங்கு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளார்கள். இங்கு வாழ்ந்த மக்கள் பார்லி, கடுகு, எள்ளு ஆகிய பயிர்களைக் கொண்டு விவசாயம் பார்த்ததாகவும் தெரியவந்துள்ளது.
மர ஏர் பயன்படுத்தி விவசாயம் பார்த்த அவர்கள் வீடுகள் திட்டமிட்டு கட்டப்பட்டவையாகவும், தனித்தனி அறைகள், பாதாளச் சாக்கடைகள் கொண்டதாகவும் இருந்தது கூடுதல் சிறப்பு. நன்றாக செப்பனிடப்பட்ட சாலைகளும் இருந்திருக்கின்றன.
நகைகள், கடவுள் சிலைகள், பித்தளை ஆயுதங்கள், ஓவியங்கள் ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்டன. அவை மட்டுமல்லாது கலைஞர்கள் பித்தளை மற்றும் செம்பு கருவிகளைக் கொண்டு கலை வேலைப்பாடுகளை செய்துள்ளனர்.