முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர் ஜஹானால் கிபி 1620 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தோட்டம் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த பிரசித்திபெற்ற ஒரு சுற்றுலா மையமாகும்.
மேற்கூரைத்தோட்டங்களால் சூழப்பட்ட பழமையான நீரூற்று இத்தோட்ட்த்தின் சிறப்பம்சமாகும். சினார் மரங்கள், நீரூற்றுக்கள், மற்றும் பச்சைப்பசேலென்ற புல்வெளிமைதான்ங்கள், இவ்விட்த்தின் எழிலை மேலும் மெருகேற்றுகின்றன.
இங்குள்ள நீரூற்றிலிருந்து வரும் தண்ணீர் ஒரு நீர்வீழ்ச்ச்சியை உருவாக்கி அதன் பின் தோட்டத்துக்குள் நுழையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தின் மேல்பகுதி, தண்ணீர்ப் பொக்கிஷம் என்று பொருள்படும் ‘ஹமாம்’ உடன் கூடிய, “ பாக்-எ-பேகம் ஆபத்” என்று அழைக்கப்பட்ட்து.
இது பிற்காலத்தில், சாஹிப் ஆபத் என்று அழைக்கப்படலானது. முகலாய இளவரசர், தாரா ஷிகோ இத்தோட்ட்த்தில் பிற்பாடு ஒரு மசூதியை நிறுவினார். அனந்த்நாக்கிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீநகரிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவிலும், அச்சால்பல் அமைந்துள்ளது.
அருகாமையில் உள்ல தனியார் தங்குமிடங்களிலும், பயணியர் மாளிகைகளிலும் சுற்றுலாப்பயணிகள் தங்கிக்கொள்ளலாம். தோட்ட்த்துக்கு அருகில் மீன்பிடித்தல், கேம்பிங்க் போன்ற செயல்களுக்கு வசதி உள்ளது.



Click it and Unblock the Notifications