ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில், 1902 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்ட இந்த் தேவாலயம் குல்மார்க்கிற்கு வெகு அருகில் உள்ளது. ஆங்கிலேய கட்டிடபாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.
இம்மாநிலத்திலுள்ள மிகச் சில கிறித்துவ தேவாலயங்களுள் இதுவும் ஒன்று. 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாலயமானது ஆங்கிலேய ஆட்சியின் பாரம்பரிய நினைவுச்சின்னமாகவும் விளங்குகிறது.
இத்தேவாலயத்தை சுற்றிலும் பழங்கால பாணியில் கட்டப்பட்ட ஓட்டல்களும், குடில்களும் உள்ளன. சுற்றுலாப்பயணிகள் இவற்றில் தங்கிக்கொள்ளலாம்.
இவ்விடத்தை சுற்றிலும் அமைந்துள்ள அல்பைன் மரங்கள் இவ்விடத்திற்கு மேலும் எழில் சேர்க்கின்றன. இத்தேவாலயத்திற்கு அருகில் ஒரு இஸ்லாமிய மசூதியும், ஒரு இந்துக் கோவிலும், சீக்கியக் குருத்வாரா ஒன்றும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications