Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவாலியர் » ஈர்க்கும் இடங்கள் » மன்மந்திர் அரண்மனை

மன்மந்திர் அரண்மனை, குவாலியர்

54

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரண்மனை மன்மந்திர் அரண்மனையாகும். இதயமேயில்லாத பல ஆதிக்க சக்திகளால் உருவான பல நெஞ்சைத்தொடும் சம்பவங்கள் இந்த அரண்மனையில் நடந்துள்ளன.

இந்து கட்டிடக்கலையும் மத்தியகாலக் கட்டிடக் கலையும் கலந்து பின்பற்றப்பட்ட கட்டிடபாணிக்கு இது சிறந்த உதாரணமாகும். வட்ட வடிவில் அமைந்துள்ள இது நான்கு அடுக்கு மாளிகையாகும்.

இரண்டு தளங்கள் தரைக்குக்கீழே உள்ளன. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தோமார் வம்ச அரசரன ராஜா மான் சிங் தோமார் என்பவரால் கட்டப்பட்டது. பின்னர் இந்த அரண்மனை ராஜபுத்திரர்கள், டில்லி சுல்தான்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், சிந்தியாக்கள் என்று பல்வேறு வம்சத்தினரின் ஆளூகையின்கீழ் இருந்தது. 

இது சித்திரங்களின் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இவ்வரண்மனையின் சுவர்களில், வண்ணமயமான, மலர்கள், இலைகள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. அரண்மனையின் உள்ளே வட்டவடிவில் ஒரு சிறைச்சாலையும் உள்ளது.

இந்த சிறைச் சாலையில்தான் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தனது உடன்பிறந்த சகோதரன் மூரத் என்பவரைக் கொன்றார். உள்ளே ஜௌகார் குளம் என்ற குளம் ஒன்று உள்ளது. இங்குதான் இறந்து போன ராஜபுத்திர மன்னர்களின் மனைவியர் சதி என்னும் உடன்கட்டை ஏறித் தம் உயிரை மாய்த்துக்கொள்வார்களாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon