படாலேஷ்வர் கோவில், ஹஜிபுரின் திகைப்பூட்டும் அற்புதங்களில் ஒன்று. மேலும் இது இறைவனின் இறைவனான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலானது ஜதுவா சாலையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலானது பண்டைய காலத்தில் இருந்து இருப்பதாக நம்பப்படுகின்றது.
முன்பொரு கால கட்டத்தில் இறைவன் சிவன் இங்கு நேரில் தோன்றி சிவலிங்க வடிவில் இங்கு நிரந்தரமாக வசிக்க முடிவு செய்து தங்கியதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் சிவனின் தெய்வீக படங்கள் பலவும் உள்ளன.
இந்தக் கோவிலுக்கு சிவனின் கருணை மற்றும் பக்தியை எதிர்நோக்கி வரும் பக்தர்கள் லிங்கத்தை வணங்குவதுடன் அவருடைய படங்களையும் வணங்கிச் செல்கின்றனர்.
ஹெம்ஸ் என்கிற கோஷம் கோவிலின் தெய்வீக உணர்வை அதிகரிக்கின்றது. சிவராத்திரி போது, கோவில் அதிகமான அலங்காரத்துடன் விளங்குகின்றது. அப்பொழுது இங்கு வரும் பக்தர்கள் தீய சக்திகளில் இருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு காணிக்கைகளை செலுத்தி பிராத்திக்கின்றனர்.



Click it and Unblock the Notifications