மகாத்மா காந்தி சேது என்பது உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றாகும். இந்தப் பாலம் 1982 ம் ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. கங்கை நதியின் மேல் கட்டப்பட்ட இந்தப் பாலம் பீஹாரின் ஹஜிபுர் மற்றும் பாட்னாவை இணைக்கின்றது.
சுமார் 5.575 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலம் 48 தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அதிவிரைவு போக்குவரத்து மற்றும் சிறந்த போக்குவரத்து வசதிகளை இந்தப் பகுதிக்கு வழங்குகின்றது.
மகாத்மா காந்தி சேது கட்டடக்கலை என்பது தொலைநோக்குப் பார்வை மற்றும் அதைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.