கெலவரப்பள்ளி அணை, தமிழகத்தில் உள்ள பொன்னையார் நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது, இது 13.50 மீட்டர்கள் உயரத்திற்கு எழுப்பப்பட்டு, 480 கன அடி கொள்ளளவை கொண்டுள்ளது.
கூடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களுக்கு இந்த அணை நீர் பயன்பட்டு வருகிறது. கெலவரப்பள்ளியை நோக்கி செல்லும் போது பெங்களூர் பாதையில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் ஓசூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இந்த அணை அமைந்திருக்கிறது.
ஓசூரில் குடியிருப்பவர்களுக்கும், வார விடுமுறைக்கு ஓசூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது விருப்பமான சுற்றுலா தலம் ஆகும். கெலவரப்பள்ளி அணையில குழந்தைகள் பூங்காவை தவிர அனைத்து வயதினருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய காணப்படுகின்றன.
அதோடு சுற்றுலாப் பயணிகளுக்கு நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுதலை அளித்து புத்துணர்வூட்டும் ஸ்தலமாக கெலவரப்பள்ளி அணை விளங்குகிறது. இங்கு காணப்படும் பிலிக்கன் மற்றும் ஸ்பூன்பில் போன்ற புலம்பெயர் பறவைகள் நம் கண்களுக்கு விருந்து அளிக்கின்றன.
மேலும் உள்ளூர் கலாச்சாரத்தை குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் உடையவர்கள் நீர்த்தேக்கத்தின் அருகே இருக்கும் சென்னத்தூருக்கு சென்று பார்வையிடலாம்.



Click it and Unblock the Notifications