ராஜாஜி நினைவுமண்டபம் ஓசூருக்கு அருகே இருக்கிறது. இந்தியாவின் முதல் மற்றும் கடைசி ஆளுநரான சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியை கௌரவிக்கும் நோக்கத்தோடு தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டு இருக்கின்றது.
ராஜகோபாலச்சாரி தொரப்பள்ளியில் பிறந்தவராவார். இந்த நினைவு மண்டபத்தில் ஒரு நல்ல நூலகமும், ராஜகோபாலச்சாரியின் காலத்தை சார்ந்த புகைப்படங்களும், படைப்புகளும் உடைய காட்சிக்கூடம் இருக்கிறது. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி இந்நாட்டிற்கு செய்த சேவையின் நினைவுபடுத்தும்படியாக ஒரு மார்பளவு சிலையும் நிறுவப்பட்டு உள்ளது.
ராஜாஜி நினைவுமண்டபத்தை அடைவதற்கு ஓசூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 7ல் கிருஷ்ணகிரிக்கு நேராக செல்ல வேண்டும். பெரண்டப்பள்ளியை அடைந்த பிறகு அங்கு இருந்து வலது பக்கம் திரும்பி, தொரப்பள்ளி வரவேற்பு வளைவுக்கு செல்லவும், அங்கு இருந்து தொடர்ந்து 3 கி.மீ. தூரம் சென்றால் ராஜாஜி நினைவுமண்டபத்தை அடையலாம்.