இகத்புரியில் ஒரு அற்புதமான இயற்கை அம்சம் இந்த பாட்ஸா ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். கண்களுக்கு திகட்டாத காட்சி விருந்தை அளிக்கும் இந்த பள்ளத்தாக்கானது செழிப்புடன் காணப்படும் பசுமைப்பிரதேசத்தையும் இடையிடையே வானில் நீண்டிருக்கும் கம்பீரமான மலைகளுடனும் காட்சியளிக்கிறது.பரிசுத்தமான மாசற்ற காற்றும் கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகளை உங்களை உணர்வுகளை சாந்தப்படுத்தி கிளர்ச்சியடைய வைக்கின்றன. இயற்கையின் எழில் அம்சங்களில் மூழ்கி திளைத்து பரவசம் அடைய விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது மிகவும் உகந்த இடமாகும்.