இந்தூரில் உள்ள ஒரு மலையின் உச்சியில் பிஜசென் மாதாவிற்காக அமைக்கப்பட்டுள்ள கோவில் தான் பிஜசென் கோவிலாகும். பிஜசென் மாதாவானவர் துர்கா தேவியின் இரகசிய வடிவமாக கருதப்படுகிறார்.
1920-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், பிஜசென் டெக்ரி என்ற பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து இந்தூரின் அற்புதமான காட்சியைக் காண முடியும்.
இந்த கோவில் வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டின் நவராத்திரி திருவிழாக் காலங்களில் ஒரு கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த கண்காட்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் என அனைவரும் குவிவது வழக்கம்.
இந்த மலையின் உச்சியிலிருந்தவாறு சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது உங்கள் நினைவில் என்றென்றும் நிற்கும் காட்சியாக நிலைத்து நிற்கும். இந்த கோவிலிற்கு அருகில் ஹோல்கார்களின் விருந்தினர் இல்லம் ஒன்றும் உள்ளது.
ஆனால், அது இப்பொழுது எல்லை பாதுகாப்பு படையின் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தூர் நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த சிறிய மற்றும் அழகிய கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தூர் விமான நிலையம் மற்றும் இரயில் நிலையத்திலிருந்து எளிதில் வந்து செல்லும் இடமாக இந்த கோவில் உள்ளது.