நினைவில் நிற்கக்கூடிய விதானங்களான சாட்ரிஸ்களை கொண்டிருக்கும் இடம் தான் சாட்ரி பாக். இந்த விதானங்கள் ஹோல்கார் வம்சத்தவர் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளன.
சாட்ரி பாக், இந்தூரில் ஓடும் கான் நதியின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சாட்ரி பாக் நினைவுச்சின்னங்களின் மேல் பகுதிகளில் பிரமிடுகள் போன்ற கூம்பு வடிவ கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் ஒவ்வொரு சாட்ரியும் ஒரு அரசர் அல்லது அரசியின் நினைவிடத்தையே குறிக்கும். ஹோல்கார் வம்சத்தை உருவாக்கியவரான முதலாம் மல்ஹார் ராவ் ஹோல்காருக்காக கட்டப்பட்டிருக்கும் நினைவிடம் தான் இதில் முக்கியமான மற்றும் மையமான பார்வையிடமாகும்.
இந்த இடம் இரவு வேளைகளில் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த காட்சிகளை தரவல்லதாகும். ஏனெனில், இரவில் தான் இந்த சாட்ரிகள் மின் விளக்குகள் ஏற்றப்பட்டும், நீரூற்றுகளுடனும், செயற்கையான ஏரிகளுடனும் இயக்கம் பெற்றிருக்கும்.
இந்த இடத்தைச் சுற்றியுள்ள தோட்டம் மற்றும் செயற்கையான ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்திட முடியும். இந்த வகையான காட்சிகள் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக காண வேண்டியவையாகும்.