ஜபல்பூரில் உள்ள சௌசாத் யோகினி கோயில், இந்நகரின் வரலாற்றுச் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் ஒரு இடமாகும். ஜபல்பூரின் பிரசித்தி பெற்ற பளிங்குக்கல் பாறைகளுக்கு அருகில் அமைந்துள்ள சௌசாத் யோகினி கோயில், துர்கா தேவியின் 64 ஏவலாள்களின் சிலைகளைக் கொண்டுள்ளது.
நடுவில் அமைந்திருக்கும் சிவனின் சிலையைச் சுற்றிலும் பல்வேறு பெண் தெய்வங்களின் சிலைகள் சூழ்ந்திருக்கும் அமைப்பு, இந்த கோயிலின் தனி முத்திரை பெற்ற அம்சம் ஆகும்.
காளிச்சூரி இராஜ்யத்தால் 1000 ஏடி வாக்கில் கட்டப்பட்ட இக்கோயில், மொகலாயரின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுள்ளது. படையெடுப்பின் போது நிகழ்த்தப்பட்ட அலங்கோலங்களையும் மீறி, எஞ்சியிருக்கும் சிலை வடிவங்கள் களங்கமற்ற சிற்பக்கலையின் சாட்சிகளாய், உருவ வடிவமைப்புக்கு முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன.
ராணி துர்காவதியின் வருகையைப் பற்றிய குறிப்பை இக்கோயில் வளாகத்தில் காண முடிகிறது. சௌசாத் யோகினி கோயிலையும், கோண்ட் ராணியாகிய துர்காவதியின் அரண்மனையையும் இணைக்கும் நிலத்தடி சுரங்கம் ஒன்றும் இக்கோயிலில் காணப்படுகிறது.
மிகப் பெரும் வளாகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நேர்த்தியான கலைத்திறன் பளிச்சிட விளங்கும் சௌசாத் யோகினி கோயில், ஜபல்பூர் செல்வோர் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாக பரிந்துரைக்கப்படுகிறது.