துவாதர் நீர்வீழ்ச்சி ஜபல்பூர் மட்டுமல்லாது மத்தியப்பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. சுமார் 10 அடி உயரத்திலிருந்து பாயும் இந்த நீர்வீழ்ச்சி, நர்மதா நதியிலிருந்து உருவான ஒரு அழகிய நீர்வீழ்ச்சியாகும்.
இந்த எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி, பிரபலமான பளிங்குக்கல் பாறைகளின் வழியே பொங்கிப் பாய்ந்து, தொலைதூரத்திலிருந்தும் கேட்கக்கூடிய பெரும் உறுமலுடன் நீர்வீழ்ச்சியாகப் பரிமளிக்கிறது.
திடும் என நீர்வீழ்ச்சியாக கீழ் நோக்கிப் பாய்வதனால், இது துவா என்றழைக்கப்படும் பனிமூட்டம் போன்றதொரு புகைப்படலத்தை உருவாக்குகிறது. அதனாலேயே இதற்கு, துவாதர் நீர்வீழ்ச்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காண கண்கொள்ளாக் காட்சியாக விரியும் துவாதர் நீர்வீழ்ச்சி, வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை இங்கு வந்து குழுமச் செய்கிறது. குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் இனிமையாக பொழுது போக்குவதற்கு இது மிக அருமையான ஒரு சுற்றுலா ஸ்தலமாகும்.
நீர்வீழ்ச்சிக்கு அருகில், ஓய்வெடுக்க ஏதுவாக இடம் உள்ளது. ஜபல்பூர் நகரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சி கட்டாயம் சென்று வரவேண்டிய ஒரு சிறப்பான ஸ்தலமாகும்.