இந்திய புராணம் மகாபாரதத்தை எழுதிய, மகரிஷி வியாசரான பிலாஸ்பூரின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது. ஹரியானாவில் உள்ள யமுனா நகரம் மாநகராட்சியில் அமைந்துள்ளது பிலாஸ்பூர் நகரம். வேத வியாஸ் ரிஷிகளின் ஆசிரமம் இங்குள்ள குளக்கரையில் இருந்தது என்று இந்த வரலாற்று சிறப்பு மிக்க நகரத்தை பற்றி புராணங்கள் கூறுகிறது.
ரின்மொச்சன், கபல்மொச்சன் மற்றும் சூர்யா குந்த் போன்ற பல குளங்கள் பிலாஸ்பூரில் உள்ளது. இவை அனைத்தும் புனிதமாக கருதப்படுகிறது. ஆன்மீகத்தில் மேம்பட இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த குளத்தில் புனித நீராடுவார்கள்.
மேலும் இந்நகரம் 9-10 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உமா மகாதேவ் சிலைக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு விநாயகர் சிலை 11-12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த நகரத்தில் குப்தர்களின் ராஜிய சுவடுகளையும் காணலாம்.



Click it and Unblock the Notifications