இந்திரவதி நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசிய இயற்கை பூங்கா இதன் அருகில் ஓடும் இந்திரவதி ஆற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள மிகச்சிறந்த வனவிலங்குகள் பூங்காவாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
இதன் உள்ளே பல்வேறு விலங்கினங்கள், பறவையினங்கள் மற்றும் ஊர்வன உயிரினங்கள் வசிக்கின்றன. 1981ம் ஆண்டு இது தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டு பின்னர் 1983ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்புத்திட்டத்திற்கான சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பழங்குடி வனப்பகுதியில் உள்ள ஒரே புலிகள் சரணாயலமாக இது அமைந்திருக்கிறது.
அரிய வகையை சேர்ந்த ஒரு காட்டெருமை இனம் மற்றும் சதுப்பு நில மான் ஆகிய இரண்டும் இந்த பூங்காவின் சிறப்பம்சங்களாக அறியப்படுகின்றன. இந்த பூங்காவின் பரந்த புல்வெளிகளில் மேயும் சாகபட்சிணிகளை பார்த்து ரசிப்பதற்காகவே ஏராளமான காட்டுயிர் ரசிகர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
பலவகையான பறவையினங்களும் இந்த காட்டுப்பகுதியில் வசிப்பதால் பறவை ரசிகர்களுக்கும் இது பிடித்தமான பூங்காவாக பிரசித்தி பெற்றுள்ளது. டிசம்பர் முதல் ஜூன் வரையுள்ள பருவம் இந்த பூங்காவுக்கு விஜயம் செய்ய ஏற்றதாகும்.



Click it and Unblock the Notifications