தருன் ஜாகேஷ்வர் என்றும் அழைக்கப்படும் ஜாகேஷ்வர் கோவில் ஜாகேஷ்வரில் காணப்படும் புகழ் மிக்க புனிதத் தலம். ஆயுதம் ஏந்திய நந்தி மற்றும் ச்கந்தியையும், காவலர்களாக கருதப்படும் துவாரப் பாலகர்களையும் இக்கோவிலின் வாயிலில் காணலாம்.
இக்கோவிலின் முக்கிய பிரகாரம் மேற்கு நோக்கி அமைந்திருக்கின்றது. இக்கோவிலில் பால ஜகேவஸ்வர், அதாவது குழந்தை வடிவான சிவனை தரிசிக்கலாம்.
இங்கு சிவன் தியானம் செய்ய வந்ததாகவும் அதை காண பெண்கள் பலர் அங்கு கூடியதாகவும் அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர்களின் கணவன்மார்கள் அவர்களை அழிக்க ஒரு துறவியை நாடியதாகவும், அத்தகைய குழப்பமான சூழலை தணிக்க சிவ பெருமான் குழந்தை வடிவம் பெற்றதாகவும், அதிலிருந்து இங்கு சிவபெருமானை குழந்தை வடிவில் வணங்குவதாகவும் இத்தல வரலாறு கூறுகின்றது.
இங்கு வழிப்படப்படும் சிவலிங்கம் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பெரியப் பகுதி சிவனாகவும் சிறியப் பகுதி சிவனின் பாதியான பார்வதியாகவும் இருக்கின்றது. இங்கு ஆதிக்காலத்திலிருந்து அணையாமல் சுடர்விட்டெரியும் ‘அகந்த் ஜோதி’ இக்கோவிலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.