ஜெயின்டியா மலைகளில் உள்ள போர்காட் என்ற கிராமத்தில் போர்காட் கோவில் உள்ளது. இது பங்களாதேஷ் நாட்டு எல்லைக்கு அருகிலேயே உள்ளது.
1880-ம் ஆண்டு வரையிலும் மிகச்சரியான வடிவத்தில் இருந்த இந்த கோவில், 1897-ம் ஆண்டு வந்த ஒரு நிலநடுக்கம், அதன் அஸ்திவாரத்தை ஆடடம் காணச் செய்த போது சற்றே அழிந்த நிலையில் உள்ளது.
எனினும், மத ரீதியாக சுற்றுலா வரும் பயணிகள் இந்த இடத்தை தவற விடுவதில்லை. உண்மையில், இந்த இடம் அழிந்த நிலையில் இருப்பதால், இதன் மர்மம் மிகவும் ஆர்வமூட்டுவதாக உள்ளது.
இது சிவ பெருமானுக்கான ஒரு இந்து கோவிலாகும். இதன் உட்புறங்கள் சுட்ட செங்கற் கட்டிகளால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் சுமார் 100 மீ நீளமும் மற்றும் 70 மீ அகலமும் உள்ள செங்கல் சுவர் ஒன்றால் சூழப்பட்டுள்ளது.
முந்தைய நாட்களில் ஜெயின்டியா அரசர்கள் மிருகங்களை பலி கொடுத்து வந்தார்கள். எனினும், இந்த பழக்கம் இன்றளவில் பின்பற்றப்படவில்லை. சாதாரணமாக வரும் பார்வையாளர்கள் இங்கே பிரார்த்தனை செய்வதையும், சிறிய அளவில் பூஜை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த இடத்திற்கு வருவதற்கு, ஒரு சுற்றுலா வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, லாட் ரிம்பாய் - பாடாவ்-போர்காட் சாலையில் வர வேண்டும்.



Click it and Unblock the Notifications