ஒரு காலத்தில் ஜெயின்டியா அரசர்களின் கோடைக்கால தலைநகரமாக இருந்த நார்டியாங் என்ற இந்த சிறு கிராமத்திற்கு, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்ததர்கள் அதன் பழமையான மத முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரதிற்காக வருகின்றனர்.
இந்த கிராமத்தில் இந்து மத பாரம்பரியம் விளங்கி வந்ததை காட்டும் சாட்சியாக இங்கிருக்கும் துர்கா தேவி கோவில் உள்ளது. உண்மையான அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு இருந்தாலும், பயணிகள் இந்த கோவிலின் சிலைகள், பலிபீடம் மற்றும் வாட்களை காண முடியும். இவை பல நூற்றாண்டுகளாகவே கடவுளுக்கு பலியிடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பொருட்களாகும்.
இங்கு ஒரு சிவன் கோவிலும் உள்ளது. நார்டியாங் கிராமத்தின் சந்தையுடன் ஒரு கதை தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அந்த கதையில் வரும் யு மார் பாலிங்கி என்ற மனிதர் ஒரு பெரிய கற்பலகையை ராலியங் சந்தையிலிருந்து இந்த சந்தைக்கு தாங்கி வந்திருக்கிறார்.
இன்றும் இந்த சந்தை பல்வேறு ஒற்றை கல் சிற்பங்களுக்கு மத்தியில் நார்டியாங்கில் இருப்பதைக் காணலாம். சிறிய மற்றும் கூரை வேயப்பட்ட அமைப்புகளுக்கு கீழே அமர்ந்தவாறு பழங்கள், காய்கறிகள், உள்ளூர் பதார்த்தங்கள் மற்றும் கரும்புகளை விற்றுக் கொண்டிருக்கும் உள்ளூர் பழங்குடியின மக்களைக் காண சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புவார்கள்.
ஷில்லாங்கில் இருந்து ஒரு வாடகை காரை எடுத்துக் கொண்டு நார்டியாங் செல்வது நல்ல வழிமுறையாக இருக்கும்.