சாம் மணற்குன்றுகள் ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த குன்றுகளின் நிழல் தோற்றத்தை பார்த்து ரசிப்பதற்கு சூரியன் மறையும் மாலை நேரம் மிகப்பொருத்தமானதாகும்.
மணற்குன்றுகளின் மத்தியில் ஜீப் மற்றும் ஒட்டக சவாரி, சொக்கப்பனை நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு பயணிகளுக்காய் காத்திருக்கும் அனுபவங்கள் ஆகும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இப்பகுதியில் பாலைவனத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் இந்த பிரதேசமே ஒரு பாரம்பரிய பண்பாட்டு மையமாய் உருமாற்றம் பெறுகிறது. பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள், ஒட்டகப்பந்தயங்கள் மற்றும் திறந்தவெளி நிகழ்த்துகலை வடிவங்கள் யாவும் பாலைவனத்திருவிழாவின் முக்கியமான சிறப்பம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications