காளேஷ்வர்நாத் மந்திர் அல்லது பிதாம்பூர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் ஹஸ்தேவ் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
வருடாவருடம் இந்த கோயிலில் சிவபெருமானின் திருமணச்சடங்கு நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சடங்குதிருவிழாவில் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கை கலந்துகொள்கின்றனர்.
இது தவிர மஹா சிவராத்திரி மற்றும் ரங்பஞ்சமி போன்ற திருநாட்களில் இங்கு பத்து நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.