ஜாஞ்ச்கிர் நகரத்திற்கு அருகில் உள்ள ஷிவ்நாராயண் ஸ்தலம் இங்குள்ள லஷ்மிநாராயண் கோயிலுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதியின் ஒட்டியாவாற்று வீற்றிருக்கும் இந்த கோயில் ஹய்ஹய்வன்ஷ் வம்ச மன்னர்களால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
மெலும், ராமரின் தீவிர பக்தையாக ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சபரி’யின் ஆசிரமம் இந்த இடத்தில் அமைந்திருந்ததாகவும் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.
வைஷ்ணவ ஷாய்லி மரபுப்படி அமைக்கப்பட்டிருக்கும் இந்த லஷ்மிநாராயண் கோயில் இதன் நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. மஹா பூர்ணிமா திருநாளில் இங்கு ஒரு திருவிழாக்கொண்டாட்டமும் விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது.