ஜோத்பூரில் உள்ள உதய் மந்திர் அதன் அற்புதமான கட்டிடக்கலைக்காக உலகப் பிரசித்தி பெற்றது. இந்த பிரம்மாணடமான கோயில் 102 தூண்களுடன் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
இதன் நுழைவாயிலின் மேல் பக்கங்கள் மணற்பாறை சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகை நாள் பூராவும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாம். அதோடு இந்தக் கோயிலில் காணப்படும் நாத் யோகிகளின் சித்திரங்கள், கோயிலின் எழிலுக்கு எழில் கூட்டக் கூடியவை.
மேலும் கோயிலின் கருவறை மெல்லிய துணியை கொண்டு மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த அமைப்பை சுற்றி சந்தனக்கட்டைகளால் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச்சட்டங்கள் மிக நேர்த்தியான கலைப்படைப்பாகும். அதுமட்டுமல்லாமல் கோயிலின் பிரதான வாயிலும் சந்தனமரத்தினால் உருவாக்கப்பட்டதுதான்.



Click it and Unblock the Notifications