உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகத்தில் ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய பலவகையான அரிய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாதிரி ஏரோப்பிளேன்கள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள், பழமையான கடிகாரங்கள், பாப் கைக்கடிகாரங்கள், கரண்டி வகைகள், அபூர்வ கற்கள், புகைப்படங்கள் மற்றும் வேட்டைச்சின்னங்கள் போன்றவை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க அரிய பொருட்களாகும்.
ஜோத்பூர் ராஜவம்சத்தின் கலாரசனையை இந்த புராதன கலைப்பொருட்கள் புலப்படுத்துகின்றன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.