ஜஸ்வந்த் தடா எனும் இந்த நினைவு மாடம் மெஹ்ரான்கர் கோட்டை வளாகத்தின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இது ஜோத்பூரின் 33 வது ரத்தோர் வம்ச மன்னரான மஹாராஜா இரண்டாம் ஜஸ்வந்த் சிங்கின் நினைவுச்சின்னமாகும் வெண்பளிங்கு கல்லினால் ஆன இந்த நினைவுச்சின்னம் அவரது மஹாராஜா சர்தார் சிங்கினால் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
இது தன் பளிங்குக்கல் வேலைப்பாடுகளுக்காகவே ‘மார்வாரின் தாஜ்மஹால்’ என்றும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இதன் மைய மண்டபம் ஒரு கோயில் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.