ஜோர்கட் நகரத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் ராஜா மைய்தாம், டோக்லாய் ஆற்றின் தென் கரையில் உள்ள ஒரு பேழையையே குறிக்கிறது. அக்டோபர் 1, 1894-ல் இறந்த அரசர் புரந்தர் சின்ஹா புதைக்கப்பட்டுள்ள இடமாகவே இந்த கல்லறை உள்ளது.
இந்த அரசரின் சாம்பலை பாதுகாத்து வைத்திருக்கும் இடமாக கட்டப்பட்ட ராஜா மைய்தாம், இந்த மாபெரும் அஹோம் அரசரின் பெருமை மிகு நாட்களை நினைவுபடுத்தும் இடமாகவே இன்றளவில் உள்ளது.
ஜோர்கட்டில் உள்ள பிற மைய்தாம்களைப் போலவே, வரலாற்றின் தூரிகைகளால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் இந்த மைய்தாமிற்கும் பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அழகுற பராமரிக்கப் பட்டு வரும் இந்த மைய்தாமில் உள்ள பேழையும் தனித்தன்மையானதாக விளங்குகிறது.
ஜோர்கட் நகரத்தின் மையத்தில் ராஜா மைய்தாம் அமைந்துள்ளது. இந்த பேழையை கொண்டிருக்கும் இடத்திற்கு பொது போக்குவரத்து சாதனங்களில் எளிதில் செல்ல முடியும். ஜோர்கட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக ராஜா மைய்தாம் உள்ளது,



Click it and Unblock the Notifications