1850-ம் ஆண்டில் மணிராம் திவானால் அமைக்கப்பட்ட சின்னமோரா டீ எஸ்டேட் அஸ்ஸாமின் முதல் தேயிலைத் தோட்டமாகும்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துணை ஆணையராக இருந்தவரின் சிரஸ்டாதாராக பணியாற்றியவர் மணிராம் திவான். இந்த எஸ்டேட் ஜோர்கட் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலேயே உள்ளது.
அறுவடைக் காலத்தின் போது இந்த கண்கவரும் தேயிலைத் தோட்டம் பசுமைப் போர்வையில் மின்னிக் கொண்டிருக்கும். இந்த தேயிலைத் தோட்டத்தின் குறுகலான வழிப்பாதைகளில், குள்ளமான இந்த செடிகளினூடாக நடந்து செல்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
டீ உற்பத்தி செய்யப்படுவதைப் பற்றி அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருந்தால் சின்னமோரா டீ எஸ்டேட்டில் அதற்கான பதில் உண்டு. மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்கும் தேயிலை தோட்டப் பணியாளர்கள் நாம் தேயிலை உற்பத்தி பற்றி தெரிந்து கொள்ள மிகவும் உதவுவார்கள்.
இந்த எஸ்டேட்டிற்கு சென்று வர பொது போக்குவரத்து சேவைகளையும் மற்றும் தனியார் வாடகை டாக்ஸிகளையும் பயன்படுத்தலாம்.