காஞ்சி காமகோடி மடம், ஆதி சங்கரரால், தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரில் நிறுவப்பட்டது. இந்த மடம் இந்துக்களால் மிகவும் போற்றப்படும் ஒரு ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. மடத்தைச் சேர்ந்த ஐந்து பஞ்ச பூத ஸ்தலங்களுள் காஞ்சி மடமும் ஒன்று.
இம்மடம், உண்மையில் எப்போது கட்டப்பட்டது என்று யார்க்கும் தெரியாது; ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கிடைத்த ஆதாரத்தின் படி, கடந்த 2500 ஆன்டுகளுக்கும் மேலாக, இம்மடம் இங்கு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகவல், மடத்தின் சுவர்களில் காணப்படும் சுவரோவியங்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் படியும், நிரூபிக்கப்பட்டுள்ளது. சில வரலாற்று ஆர்வலர்கள், இம்மடம் சுமார் மூன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறி வருகின்றனர். ஆனால், இக்கூற்றை நிரூபிக்கக்கூடிய வலுவான ஆதாரங்கள் இல்லை.
முதலில் இம்மடம் கும்பகோணத்தில் தான் இருந்துள்ளது. பின், ஹைதர் அலியின் படைகள் அங்கே வந்த போது, காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று, இம்மடம் தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது.
ஒவ்வொரு வருடமும், ஆதி சங்கரர் மேல் பக்தி கொண்ட ஆயிரக்கணக்கானோர், அமைதியையும் நிம்மதியையும் நாடி, இங்கு வருகை தருகின்றனர்.