தேவராஜஸ்வாமி கோயில், பழங்கால சிற்பம் மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இக்கோயில் மஹா விஷ்ணுவுக்காக, விஜயநகரத்து மன்னர்களால் கட்டப்பட்டது. இது, காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் உள்ள சிறந்த சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள், அக்காலத்தில் சிறந்து விளங்கிய சிற்பம் மற்றும் தொழில்நுட்பத்தினை நமக்கு எடுத்துக்கூறுவதாக உள்ளது.
இத்தூண்கள் அனைத்தும், கையால் செதுக்கப்பட்டு, இந்துக் கடவுள்களின் பல்வேறு வடிவகளைத் தாங்கி நிற்கின்றன. இக்கோயில் வளாகத்தில் உள்ள மிகப் பெரிய திருமண மண்டபம், மஹா விஷ்ணுவுக்கும், லக்ஷ்மி தேவிக்கும், தேவலோகத்தில் நடந்த திருக்கல்யாணத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் தனிச்சிறப்பு யாதெனில், ஒரு கல்லில் செதுக்கப்பட்டுள்ள் மிகப் பெரிய சங்கிலி ஆகும். சுமார் 10 அடி கொண்ட மஹா விஷ்ணுவின் திருவுருவச் சிலை ஒன்று, கோயிலினுள்ளே கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்தில், தண்ணீரில் மூழ்கிய வண்ணம் காணப்படுகிறது.
நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே, பக்தர்கள் இச்சிலையை காணும் வகையில், இக்கோயில் குளத்தின் தண்ணீரை மொத்தமாக வற்றச் செய்கின்றனர். சுமார் 48 நாட்களுக்குப் பின்னரே இச்சிலை மீண்டும் தண்ணீருக்குள் மூழ்க வைக்கப்படும்.