காங்க்ரா மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக இந்த பகலாமுகி கோயில் சிறப்புடன் அறியப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கணிசமான ஆன்மீக யாத்ரீகர்கள் இந்த கோயிலில் குடிகொண்டுள்ள பகலாமுகி அம்மனை தரிசிக்க வருகை தருகின்றனர்.
ஹிந்துபுராணிக ஐதீகங்களின்படி அறிவுக்கான பத்து தெய்வங்களில் ஒன்றாக இந்த பகலாமுகி தெய்வம் குறிப்பிடப்படுகிறது. தரம்ஷாலா-காங்க்ரா-சண்டிகார் சாலையின் முனையில் அமைந்துள்ள இக்கோயில் காங்க்ராவின் சிறப்பம்சமான கொட்லா கோட்டையின் வாயில் பகுதியில் உள்ளது. பகலாமுகி எனும் பெயருக்கு ‘ஆளும் சக்தியின் வெளிச்சம் கொண்ட முகம்’ என்பது பொருளாகும்.