சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் சமண மதத்தவர்களால் ஜெயின் கண்ணாடி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் பகவான் மஹாவீர் மற்றும் பிற தீர்த்தங்கரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகள் பெரிய விதானங்கின் மேல், மாபெரும் மார்பிள் மேடைகளின் மேல் நின்று கொண்டுள்ளன.
கமலா டவருக்கு அருகில் உள்ள மஹேஸ்வரி மகாலில் இந்த கோவில் அமைந்துள்ளது. பெயரைப் போலவே, இந்த கோவில் முழுமையும் கண்ணாடியால் கட்டப் பட்டுள்ளது.
பாரம்பரியமான வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கோவில் உள்ளூர் மற்றும் தொலைதூரங்களிலும் இருந்தும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.
தளங்கள் மார்பிள் கற்களாலும், கோவிலின் சுவர்கள் மற்றும் கூரைகள் வெட்டப்பட்ட கண்ணாடிகளால் கலைநயமிக்க வகைகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன.
இது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை வேலைப்பாடாகும். இந்த சுவர்களில் உள்ள ஓவியங்கள் பல்வேறு வண்ணச்சாயங்கள் பூசப்பட்ட கண்ணாடிகளில் உருவாக்கப்பட்டும், சமண மத தத்துவங்களை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளன. இந்த கோவிலில் பிரமிக்கத் தக்க வளைவுகளும், அவற்றில் கலைநயமிக்க கண்ணாடி அலங்காரங்களையும் காண முடியும்.



Click it and Unblock the Notifications