மாரியம்மன் கோவில் கருவூரில் அமைந்து இருக்கிறது, இது இவ்விடத்தின் முக்கிய கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய அம்மன் கோவில் இதுவே. மே மாதம் நடைபெறும் ஆண்டு திருவிழாவே இக்கோவிலின் மிகவும் விசேஷமான நாள் ஆகும்.
இந்நாளில் கும்பம் கோவிலுக்கு வெளியே எடுத்து வரப்பட்டு ஆர்க்காவதி நதிக்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிகழ்வுக்காக ஒரு பெரிய பவனி நடைபெறுகின்றது. பின்னர் கும்பம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும், இச்சமயத்தில் நகரில் இருக்கும் அனைவரும் இத்திருவிழாவை கொண்டாடுகின்றார்கள்.