கரூருக்கு வட மேற்கு திசையில் உள்ள புகழூரில் புகழிமலை ஸ்ரீ அறுபடை முருகன் கோவில் இருக்கிறது. காவிரி ஆற்றின் அருகே இருக்கும் வேலாயுதபாளய குன்றின் உச்சியில் இருக்கும் இக்கோவில் பழமை வாய்ந்தது.
சேரர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் இதன் அழகான சிற்பவேலைகளுக்கு புகழ்பெற்றது. முருகப்பெருமான் அல்லது சுப்பிரமணியனே இக்கோவிலின் முக்கிய தெய்வம். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழாவே அதிக ஆரவாரமான திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது, பக்தர்கள் இக்கோவிலின் தெய்வத்தை ஒரு குதிரை வண்டியில் ஏற்றி, இரவிலே கோவிலை சுற்றி வருவார்கள்.