கத்துவா மாவட்டத்தில் 6000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது தெளலா வாலி மாதா கோவில். ஜோதியா தி மாதா கோவிலில் இருந்து 10கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவிலை பூந்த், கத்லி, பனூர் மலைப்பாதைகளில் நடப்பதன் மூலம் அடையலாம்.
ஆடு மேய்ப்பவர் ஒருவர் அம்மன் மாதி தர்ருக்கு சிறுமி வடிவில் வருகை தருவதாக கனவு கண்டார். அதிலிருந்து தினமும் மாதி தர்ருக்கு சென்ற அவரால் ஒருநாள் பனிப்பொழிவு அதிகமிருந்ததால் செல்லமுடியவில்லை.
அதன்பின் தெளலி வாலா மாதா கோவில் இருக்கும் இடத்திற்கு அம்மன் செல்ல முடிவெடுத்ததாகவும் அதனாலேயே அந்தக் கோவில் அங்கு அமைக்கப்பட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
வருடத்திற்கு இரண்டுமுறை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி காலங்களில் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகை தருகிறார்கள். ஜம்மு, பதன்கோட், உதம்பூர், மஹன்பூர், பூந்த், பில்லாவார், பசோலி ஆகிய ஊர்களில் இருந்து இப்பகுதிக்கு பேருந்து வசதி உண்டு.



Click it and Unblock the Notifications