காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் நரசிம்மரின் கோவில்தான் நரசிங் ஜீ கோவில். 1600 வருட பழமை வாய்ந்த இந்தக் கோவில் கத்துவா நகரில் இருக்கும் கக்வால் நகரத்தில் இருக்கிறது.
இந்த கோவிலில் நரசிங் அவதார், நரசிங் ரூப் மற்றும் அன்னபூர்ணா என மூன்று முக்கிய சிலைகள் இருக்கின்றன. மூன்று சிலைகளையும் ஒன்றாக காணமுடிந்த ஒரே கோவில் இதுமட்டுமே என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. கோவிலின் முன்பு பெரிய குளம் ஒன்றும் இருக்கிறது.
பாபா ஹரி தாஸ் ஜி மஹாராஜி என்பவரின் ஜீவ சமாதி இக்கோவிலின் உள்ளேயே அமைந்திருக்கிறது. மேலும் அமர்நாத் போல புகழ்பெற்ற மஹா மண்டலேஸ்வர காடி ஒன்றையும் இங்கு காணலாம். இங்கு தினமும் காலை, மதிய, இரவு உணவு 200 பேருக்குமேல் வழங்கப்படுகிறது.
மஹாசங்கராந்தி, ரத்த கரா, ஜன்மாஷ்டமி ஆகிட விழாக்களின் போது இக்கோவில் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சிறப்பு விற்பனையாக அவ்வப்பொழுது மலையில் வாழும் மக்களால் செய்யப்படும் கம்பளித்துணிகளும், கைவினைப்பொருட்களும் இங்கே விற்படுகிறது.



Click it and Unblock the Notifications