காஸிரங்கா சரணாலயத்திற்கு அருகில், கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகா பகுதயிலிருந்து 5 கிமீ தொலைவில் தியோபர்பத் சிதைவுகள் அமைந்துள்ளன. இரண்டு மலைகள் என்று பொருள்படும் தியோபஹார் என்றும் அழைக்கப்படும் இந்த தியோபர்பத் சிதைவுகள் மலைகளின் மீதுள்ள தொல்பொருள் சின்னங்களுக்காக புகழ் பெற்றுள்ளன.
இங்கிருக்கும் மலையின் மீதுள்ள கோவிலில் பல்வேறு இடங்களில் உடைந்த சிலைகள் சிதறிக் கிடப்பதைக் காண முடியும். இந்த உடைந்த சிலைகளே இக்கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளன.
வெப்பமான நாட்களில் தியோபஹார் மலைகளில் ஏறுவது நம்மை வெகுவாக சோர்வு பெறச் செய்து விடும். ஆனால், மலை மீது ஏறியவுடன் கிடைக்கும் காட்சிகளில் மனம் திளைக்கும் போது, அந்த சோர்வு மலையேறிவிடும்.
இந்த மலையின் உச்சியிலிருந்தவாறே நுமாலிகா தேயிலை எஸ்டேட்கள் மற்றும் அருகிலுள்ள காபி ஆங்லோங் மலைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியும். நுமாலிகார் பகுதி அங்குள்ள நுமாலிகார் எண்ணைய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்காக புகழ் பெற்றுள்ள இடமாகும்.
நுமாலிகாரில் உள்ள தியோபர்பத் சிதைவுகளை காண்பதற்கான டாக்ஸிகளை காஸிரங்கா தேசிய பூங்காவிலேயே பதிவு செய்து கொள்ள முடியும். செல்லும் வழியில் கோலாகாட் மாவட்டத்தின் வேறு சில சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.