அஸ்ஸாம் மாநிலத்தின் சோனிட்பூர் மாவட்டத்திலுள்ள சிறிய ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க நகரம் கோபூர் ஆகும். இந்த நகரத்தில் தான் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரரான கனக்லடா பருவா பிறந்தார்.
மக்களால் பீர்பாலா என்று பாசமுடன் அழைக்கப்பட்ட அவர், 1942-ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தின் போது இந்திய தேசிய கொடியை தாங்கி சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோபூரில் தான்டி தேவாலய், கோபூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் (Gohpur Reserve Forests) மற்றும் போர் புகுரி ஆகிய சில ஆர்வமூட்டும் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இந்நகரம், காஸிரங்காவிலிருந்து 8 கிமீ தொலைவிலேயே உள்ளது.
காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு வர திட்டமிடும் போது, சுற்றுலாப் பயணிகள் முதலில் கோபூருக்கு சென்று விட்டு மாலை வேளைகளில் மீண்டும் பூங்காவிற்கு வர திட்டமிடலாம்.
சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகளிலும் கோபூருக்கு சென்று வரலாம். இந்த சுற்றுலாப் பயணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வாடகை கார்களை அமர்த்திக் கொள்வது நலம்.