கிம்சார் கோட்டை ஜோத்பூர் நகரை நிர்மாணித்த ராவ் ஜோதாஜி மகாராஜாவின் 8-வது மகனான ராவ் கரம்சிஜி என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மஞ்சள் வண்ண கோட்டை புகழ்பெற்ற ராஜபுதன கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சியாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இக்கோட்டையின் புல்வெளிப்பரப்பு 11 ஏக்ரா அளவுக்கு பரந்து விரிந்து சுற்றியுள்ள இடங்களின் அழகை அதிகப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கிறது.
கிம்சார் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்காக கிம்சார் கோட்டை கட்டப்பட்டாலும், 18-ஆம் நூற்றாண்டில் இருந்து இங்கு அரச குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதன்பிறகு 1940-ல் இங்கு ஜனானா என்ற பெண்கள் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்தக் கோட்டையின் சில பகுதிகள் இன்று பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிம்சார் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோட்டையின் மற்ற பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
கிம்சார் கோட்டைக்கு இந்திய அரசு 'நேஷனல் கிராண்ட் ஹெரிடேஜ் அவார்ட் ஃபார் எக்ஸலன்ஸ்' எனும் சிறந்த விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளது.



Click it and Unblock the Notifications