கைஃபைர் நகர எல்லையை ஒட்டியே இந்த கிஸாடோங் எனும் கிராமம் அமைந்துள்ளது. நாகலாந்திற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த கிராமத்தில் பூர்வகுடிகளாகிய சங்க்தம் இனத்தார் வசிக்கின்றனர். ஒரு உயரமான மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த கிராமத்திலிருந்து பார்க்கும்போது ரம்மியமான பள்ளத்தாக்கு காட்சிகள் நம் கண் முன்னே விரிகின்றன.
இயற்கை அன்னை உங்களை தன் மடியில் ஏந்திக்கொண்டது போன்ற அனுபவத்தை இங்கே நீங்கள் உணரலாம். நாகலாந்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொள்ளும் பயணிகள் ஒரு பனிசூழ்ந்த குளிர்காலக் காலைப்பொழுதை இங்கு கண்டிப்பாக ரசிப்பது அவசியம்.
இக்கிராமத்தின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் இங்கு அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் பறவைகள் விஜயம் வசிப்பதாகும். குளிர்காலத்தில் மத்திய ஆசியாவின் கடுமையான குளிரிலிருந்து தப்பிக்க ஏராளமான பறவைகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றன.
பல்வேறு அற்புதமான பறவை இனங்களை இங்கு காணமுடியும் என்பதால் இந்த கிராமப்பகுதி நிச்சயம் பறவை ஆர்வலர்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அருகிவரும் பறவை இனமான ஆமுர் ஃபால்கன் எனும் பறவைகள் சபீரியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு புலம் பெயர்ந்து செல்லும்போது இந்த பகுதியில் தங்கிவிட்டு செல்கின்றன என்பது ஓர் அதிசய தகவலாகும்.



Click it and Unblock the Notifications