பாதல் மஹால் அல்லது மேகங்களின் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை கும்பல்கர் கோட்டையின் உச்சியில் அமைந்திருக்கிறது. இந்த அரண்மனை இரண்டு தளங்களை கொண்டிருப்பதோடு, மர்தானா மஹால் மற்றும் ஜனானா மஹால் இரண்டும் பாதல் மகாலுடன் ஒன்றிணைக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வருகின்றன.
மேலும் இந்த அரண்மனையின் அழகிய அறைகள் நீல வண்ண சுவர்ச்சித்திரங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு மிகவும் அற்புதமானது.
ஜனானா மஹாலில் கம்பிகளால் வலையிடப்பட்ட பலகணி ஒன்று இருக்கிறது. இந்த பலகணியின் வழியாகத்தான் அந்த காலங்களில் மஹாராணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்து வந்தனர். மேலும் இங்கு உள்ள அரங்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் குளிர் சாதன முறை மிகவும் கவர்ச்சிகரமானது.