இந்து மதத்தில் செல்வத்தின் கடவுளாக வணங்கப்படுபவர் குபேர கடவுளாவார். பெருமளவு செல்வம் கொண்டிருந்தாலும், அவர் சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்த காரணத்தால், தன்னுடைய கடவுளுக்கு மரியாதை செய்ய வேண்டி, குபேர அஸ்தான் கோவிலை கட்டினார்.
குபேரநாத்தில் இருக்கும் பாட்ராவ்னாவிலிருந்து 9 கிமீ தொலைவில், ராட்ராவ்னா-துர்க்பாட்டி சாலையிலும் மற்றும் குஷிநகரத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும், உத்திரப் பிரதேச மாநிலத்தில் இந்த புனிதத்தலம் அமைந்துள்ளது. எனவே, இந்த கோவிலை காசியா-துர்க்பாட்டி-பாட்ராவ்னா சாலை வழியாக எளிதில் அடைந்திட முடியும்.
பின்னர், பாட்ராவ்னாவின் அரசரால் இந்த இடத்தில் ஒரு சிவன் கோவிலும் கட்டப்பட்டது. பல்கன் மற்றும் வைசாலி மாதங்களின் 13-ம் நாளில் வரும் சிவராத்திரியின் போது இந்த இடம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த இரு மாதங்களிலும் இந்த நாள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பல்கன் மாதத்தில் ஒரு வார காலத்திற்கு பண்டிகை கொண்டாடப்படும் போது, பைசாகி பண்டிகை இங்கு ஒரு மாத காலத்திற்கு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவராத்திரி நாளில் சிவலிங்கத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதற்காக இந்த கோவிலில் குவிவது வழக்கம்.



Click it and Unblock the Notifications