இந்த கோவிலின் பெயரில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளின் பெயர்கள் இருப்பதால் இந்த நாடுகளைச் சேர்ந்த பக்தர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று கருதப்பட்டாலும், இங்கிருக்கும் அஸ்ட தாடு அல்லது எட்டு விதமான உலோகங்களால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டதாகவும் மற்றும் இந்த கோவிலின் கட்டுமானத்திற்கு ஜப்பானிய அரசரிடமிருந்து அதிகளவிலான பொருளுதவியும் கிடைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஜப்பானிலிருந்து 2 பாகங்களாக கொண்டு வரப்பட்ட புத்தரின் சிலை, இந்த கோவிலில் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு இன்றிருக்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுத் தலத்தை அடாஹோ இஸின் என்ற உலக பௌத்த கலாச்சார கூட்டமைப்பு வடிவமைத்தது, மற்றும் மேற்குறிப்பிட்ட படி ஜப்பானிய அரசர் இதற்கான பொருட்செலவை ஏற்றுக் கொண்டார்.
இந்த கோவிலில் பிரமிக்கத்தக்க வகையில் உள்ள வட்ட வடிவ பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள அஸ்ட தாடு சிலையின் மீது, பிரகாரத்தைச் சுற்றிலும் உள்ள ஜன்னல்களின் வண்ணப்பூச்சுகளினூடாக பாய்ந்து வரும் ஒளிக்கற்றைகள் படும் காட்சி, ஒரு தனித்தன்மையான தெய்வீக வளையத்தையும் மற்றும் அமைதியான சூழலையும் ஏற்படுத்துவதாக இருக்கும்.
இந்த புத்தரின் சிலையின் இரு பக்கங்களிலிலும் அவருடைய முதன்மையான புத்த பிட்சுகளின் சிலைகள் ஜப்பானிய கலை வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன.