ரங்கிட் ஆற்றின் கரையில் உள்ள கீரதேஸ்வர் மகாதேவ் கோவில் சுற்றுலாப் பயணிகள் வழிபட்டுச் செல்லும் பிரபலமான கோவிலாகும். சிவபெருமானுக்கான இந்த கோவில், இந்து மத இதிகாசமான மகாபாரதத்துடன் பல்வேறு புனைகதைகள் வழியாக தொடர்பு கொண்டுள்ளது.
பெல்லிங்கில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இந்த கோவிலை, கெய்சிங் மற்றும் பெமாயாங்ட்ஸே ஆகிய இடங்களிலிருந்தும் அடைய முடியும்.
பேளா சதுர்தேஸி என்ற பெயரில் இங்கு கொண்டாடப்படும் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்களில் மிகவும் கூட்டமாக அருகிலுள்ள மாநிலங்களிலிருக்கும் பக்தர்களும் வந்து செல்லும் இடமாக இந்த கோவில் அமைந்துள்ளது.
அர்ஜுனரின் பிரார்த்தனை மற்றும் பக்தியினால் மனம் குளிர்ந்த சிவபெருமான், ஒரு வேடனைப் போல அவருக்கு முன் இந்த கோவில் உள்ள இடத்தில் தான் காட்சி தந்து, அர்ஜுனர் மகாபாரதப் போரில் வெற்றி பெற வாழ்த்தியதாகவும் இந்த கோவிலுடன் தொடர்புடைய புனைகதை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.