நாகாலாந்தில் உள்ள ஆறுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது திகு ஆறு. மோகோக்சுங் மற்றும் லாங்லெங் மாவட்டத்தின் குறுக்கே செல்லும் திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
அதன் அழகிய தோற்றம், அமைதியான சூழ்நிலை மற்று மணல் நிறைந்த கறை என எழில் பொங்கும் திகு ஆரு, காண்போரின் எண்ணத்தைக் கவருவதில் ஆச்சர்யமில்லை. தண்ணீர் குறைவாக ஓடும் குளிர்காலங்களில், திகு ஆற்றங்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது அவ்வளவு இதமாக இருக்கும்.
பிரம்மபுத்திரா நதியின் துணை ஆறுகளில் ஒன்றான திகு ஆறு, லாங்லெங்கின் முக்கியமான சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது.
திகு ஆறு பாய்வதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வளம் நிறந்த விளை நிலங்களாக, செழிப்பாக காணப்படுகின்றன. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட லாங்லெங் மக்களின் உயிர்நாடியாக திகழ்வது திகு ஆறு. நல்ல பருவ மழை காரணமாக, அறுவடைக் காலங்களிலும் திகு ஆறு வற்றாமல் இருக்கும்.