என்ஹெச்-3 –இல் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஸ்ராவத், தனிச்சிறப்பு வாய்ந்த வடிவமைப்புடன், கண்கவர் வண்ணங்களில் நெய்யப்படும் நூல் புடவைகளுக்கு, மஹேஷ்வருடன் சேர்ந்து பிரபலமாக விளங்குகிறது.
கஸ்ராவத் அடிப்படையில் ஒரு வியாபார மையமாகும். கஸ்ராவத், சிறந்த கைவினைப் பொருட்களுக்கான உள்ளூர் சந்தைகள் மூலம் வேகமாக வளர்ந்து வருகின்றது.
சுற்றுலாப் பயணிகள், மஹேஷ்வரைப் பார்த்து ரசித்த பின், கஸ்ராவத்துக்குச் சென்று, அச்சிறு நகரத்தின் உள்ளூர் கலாச்சாரத்தில் திளைத்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.
பவானி மாதா கோயில், கங்காலேஷ்வர் பர்வத்தில் உள்ள பாபா கி மஸார், மற்றும் பழம்பெரும் கைலாஷ் குந்த் ஆகியன கஸ்ராவத்தின் இதர ஈர்ப்புகளாகும்.
கஸ்ராவத்தின் குளிர்காலங்கள், ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து குவியும் நூற்றுக்கணக்கான பக்தர்களால் கொண்டாடப்படும் கங்காலேஷ்வர் பொருட்காட்சியின் வண்ணமயமான கோலாகலங்களால் நிறைந்து காணப்படும்.
கஸ்ராவத், சுற்றுலாப் பயணிகளுக்கு கேளிக்கை மற்றும் ஆசுவாசத்தை நிச்சயமாக அளித்து, நிம்மதியான சுற்றுலாவை வழங்கவல்லதாகத் திகழ்கிறது.