நர்மதா படித்துறை 18 ஆம் நூற்றாண்டில், ஹோல்கர் மாநிலத்தின் அப்போதைய ஆட்சியாளராக விளங்கிய மஹாராணி அஹில்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டுள்ளது. நர்மதா நதி இந்தியாவின் புண்ணிய தீர்த்தங்களுள் மிகவும் புனிதமானதாக நம்பப்படுகிறது.
எப்போது கங்கை தான் அசுத்தமாக இருப்பதாக உணர்கிறாளோ அப்போதெல்லாம், இரவு நேரத்தில் ஒரு கறுப்புப் பசுவின் வடிவெடுத்து, நர்மதா நதியில் வந்து நீராடி தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
நர்மதா படித்துறை எப்போதும் இங்கு புனித நீராட வரும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படும். இப்படித்துறையிலிருந்து தெரியும் நதியின் தோற்றம் காணக் கண்கொள்ளாத காட்சியாகும்.
இந்நதி மாநிலம் முழுவதும் பிரவகித்துச் செல்வதனால் இது மத்தியப்பிரதேச மாநில மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுள்ளது. தனித்தன்மையோடு மிளிரும் நர்மதா படித்துறை, மஹேஷ்வரின் புனிதமான பகுதியாக தொன்று தொட்டே அறியப்பட்டு வருகிறது.
தீவிர பக்தி மற்றும் தூய்மையின் அடையாளமாகப் போற்றப்படும் நர்மதா நதி தீர்த்த யாத்திரையை உத்தேசித்து இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் மலைத்துப் போகின்றனர்.