கடல் மட்டத்திலிருந்து 2500 மீ உயரத்தில் உள்ள ஜோகீந்தர் நகர் ஆசியாவிலேயே மூன்று நீர்மின் நிலையங்களை பெற்றுள்ள ஒரே நகரமாக புகழ் பெற்றுள்ளது. இதன் காரணமாக இது ‘எலக்ட்ரிக் சிட்டி’ மற்றும் ‘சிட்டி ஆஃப் பவர்ஹவுஸ்’ என்ற சிறப்புப்பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பயணிகளை மலையின் மீது பரோட் எனும் இடத்தில் உள்ள நீர்த்தேக்கம் வரை தூக்கிச்செல்லும் ஒரு எலக்ட்ரிக் டிராலி ஒன்றும் இங்கு உள்ளது.
அழிவுக்கடவுளான சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு புராதன கோயிலும் இங்குள்ளது. ஹாலேஜ் வே டிராலி, விஞ்ச் காம்ப், பிர் பில்லிங், ஷனான் பவர் ஹவுஸ், பஸ்ஸி பவர் ஹவுஸ், பன்டேரி கோயில், கிலா கரண்பூர் பண்டேரி கோயில், மச்சியால் ஏரி மற்றும் லக்ஷ்மிநாராயணா கோயில் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications