தர்ணா மலையில் வீற்றுள்ள தர்ணா கோயில் மண்டி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. பார்வதி தேவியின் அவதாரமான ஷியாமா காளிக்காக 17ம் நூற்றாண்டில் ஷ்யாம் சேன் மன்னரால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஷ்யாமா காளி கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த கோயிலுக்கு மெயின் பஜார் பகுதியிலிருந்து 306 படிகளை ஏறி சென்றடையலாம். ஹிந்து தெய்வங்கள் மற்றும் யோகிகளின் அழகான ஓவியங்கள் இந்த கோயிலின் சுவர்களை அலங்கரிக்கின்றன.