உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் மும்பையை வெகு சுலபமாக அடைய முடியும். மும்பையின் சத்ரபதி பன்னாட்டு விமான நிலையத்துக்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் விமானங்கள் இயக்கப்டுகின்றன. எனவே இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். மேலும், உள்நாட்டு விமான போக்குவரத்தை பொறுத்தவரை, காலை ஐந்து மணிக்கு முதல் விமானம் கிளம்பினால், நள்ளிரவு இரண்டு மணிக்கு கடைசி விமானம் மும்பையை வந்தடையும்.