ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நகான் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா தலம் பக்கா தலாப். அமைதியான இடமான இங்கேயுள்ள குளத்தில், சுற்றுலாப் பயணிகள் மீன் பிடித்தல் மற்றும் பல்வேறு விதமான ஜீவராசிகளைக் காண்பதற்காக செல்லலாம்.
இந்த இடத்திலுள்ள அழகிய பெரிய நீரூற்று இவ்விடத்தின் அழகை மெருகேற்றுவதாக அமைந்துள்ளது. எனினும், இது வளர்ந்து வரும் இடமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு இங்கிருக்கிற பூங்காக்களை ரசிக்கும் வாய்ப்புகள் விரைவில் ஏற்படுத்தப் பட இருக்கின்றது.
இந்த இடத்தின் மதிமயக்கும் விஷயம் என்னவென்றால், குக்கா பீர் கண்காட்சி மற்றும் பாமன் துவாதசி காண்காட்சி ஆகிய இரண்டு திருவிழாக்கள் தான். மேலும், காய்கறிகளை விற்கும் மொத்தவிலை அங்காடிகளையும் இவ்விடத்திற்கு அருகில் பார்வையிட முடியும். நஹன் நகரத்தின் ஒரேயொரு இரயில் வண்டி முன்பதிவு நிலையமும் இவ்விடத்தில் தான் அமைந்துள்ளது.